சனி, 5 பிப்ரவரி, 2011

கடற்கரை


இது
அழகு நிறைந்தது மட்டுமல்ல
அவலம் நிறைந்ததும் தான்.....

இங்கே
துள்ளித் துடித்துச் சாவது
மீன்கள் மட்டுமல்ல
எங்கள்
மீனவர்களும்!

கண்ணுக்கெட்டும் தூரம்வரை
நாரைகளைக் காணோம்
கழுகுகளின் நடமாட்டம்..

பல்லாயிரம் பிணங்களைச்
சுமந்துகொண்டிருக்கும்
மணல் மேடுகளாய்.......

கடற்கரை!

(எனது வேர்களின் வியர்வை நூலிலிருந்து)

1 கருத்து:

மாணவன் சொன்னது…

வரிகள் ஒவ்வொன்றும் வலிகள் நிறைந்த உணர்வுகள்

பகிர்வுக்கு நன்றி அண்ணே...