ஞாயிறு, 22 மே, 2011

நெருடல்

                         நெருடல்               

ஞாலம் எங்கும் அடிமை வேடமா ?
     நிமிரா திருக்க நாங்கள் ஓடமா?
கால காலமாய் இனநிற பேதமா?
      கனல்தமிழ் வீரம் தீவிர வாதமா?
சொந்த மண்ணிலே அனாதைக் கோலமா?
        சோகம் இன்னுமே அங்கே நீளுமா?
வெந்த புண்ணிலே வேல்கள் பாயுமா?
        விடுதலை பெற்றே கவலை மாயுமா?


பாலம் கடல்வழி இராமன் போட்டதாய்
       பகுத்தறி  வின்றிச் சேதுவைத் தடுப்பதா?
கூளம் தின்னும் மாடுகள் போலவே 
       கூட்டங்  கூட்டமாய் பழங்கதை பேசியே 
ஓலம் எல்லாம் கேட்டும் செவிடராய் 
       உணர்சிகள் அற்று உறங்கிக் கிடப்பதா?
ஈழம் வாழ்ந்திட ஏதும் செய்திடா 
       ஈனப் பிறப்பால் நெருடல் இல்லையோ?