வெள்ளி, 9 செப்டம்பர், 2011

ஏணி, தோனி

                                    ஏணி, தோணி 
கைபிடித்து ,
 காலூன்றி ,
 மெல்ல மெல்ல ஏறி 
ஏற்றம் கண்டபின் ...

ஏன் நீ ?

என 
எட்டி உதைக்க
காப்பகங்களில்
கண்ணீருடன் கதியற்றுக் கிடக்கின்றன ....


சில அம்மா ஏணிகளும்,
பல அப்பா தோணிகளும்

மரப்பாச்சிப் பொம்மைகள்

                     மரப்பாச்சிப் பொம்மைகள் 
இனப்போர்ச் சுனாமியில் 
பிள்ளைகள் இறந்துவிட ...
அவலங்களோடு......
கரையொதுங்கிக் கிடக்கும்                     

மரப்பாச்சிப்     பொம்மைகளாய்    

வேலியோரம் .....

ஈழ மக்கள் !