புதன், 22 ஜூன், 2011

தமிழகப் பள்ளிக் கல்வி

                      தமிழகப் பள்ளிக் கல்வி


காமராஜருக்குப் பின் எந்த அரசும் பள்ளிக்கூடம் கட்டவில்லை. பொதுமக்களில் ஒருவரும் அது பற்றிக் கேள்வி எழுபவும் இல்லை.
வந்த அரசுகளும் மக்களும் தனியார் பள்ளிகளுக்கு ஆதரவு தந்தனர்.
அரசுப் பள்ளியில் படித்து நல்ல மதிப்பெண் பெற்ற மாணவரை அரசே
பணம் கொடுத்து தனியார் பள்ளியில் சேர்த்து விடுவதாகவும் சொன்ன
கேவலமும் இங்கே நடந்தேறியது.


    டாடி மம்மி எனத் தன் பிள்ளைகள் அழைக்கவேண்டுமென நினைத்தனர்
பெற்றோர். இதனால் தனியார் பள்ளிகளின் ஆதிக்கம் அதிகமானது. வசதியுள்ளோர் நல்லபள்ளிகள் என பணம் அதிகம் பெரும் பள்ளிகளை நோக்கி ஓட அதை அனைவரும் பின்தொடர்ந்தனர்.

    சமச் சீர்க் கல்வி பற்றிய சிந்தனை நாற்பது ஆண்டுகளுக்குப் பின் இப்போதுதான் வந்தது.
அது ஒரு வழியாக நிறைவேறும் வேளை ஜெயலலிதா அரசு தடைபோடுகிறது.

     சமசீர் கல்வி வேண்டுமென்றும், தனியார் பள்ளிகள்
அதிக்கட்டணம் வசூலிக்கிறது என்றும்  ஆர்ப்பாட்டம் செய்யும்
 மேதாவிகளே !. முன்பு இனித்தது இப்போது கசக்குகிறதா?

அரசாங்கத்திடம் அருசுப் பள்ளிகள் ஏன்கட்டவில்ல்லை? என்று
கேட்காமல் , தனியார் பள்ளிக் கட்டணத்தைக் குறைக்கச்
 சொல்லிப் போராடும் முட்டாள்களே! உங்களை என்னசெய்ய?
சே!!!!