சனி, 5 பிப்ரவரி, 2011

தாய்மை!


இங்கு 
ஆணுக்கு மட்டுமே 
அடுத்த பிறவி!


மகளிருக்கு 
மறு பிறப்பும் 
மனிதப் பிறப்பே!


பெண்ணாக ஒரு பிறப்பு
தாயாக மறுபிறப்பு!


உறுப்பு தானங்களையே
உயர்வாகப் பேசும் உலகில்
இதோ!
உயிர்ப் பணயம் வைத்து
உயிர் தருகிறாள் 
ஒரு தாய்!

(எனது வேர்களின் வியர்வை நூலிலிருந்து)

5 கருத்துகள்:

அன்புடன் நான் சொன்னது…

தாய்மையைப் பற்றிய மிக நேர்மையான படைப்பு.... பாராட்டுக்கள்... கோவிந்தராசு.

அன்புடன் நான் சொன்னது…

வலையுலகின் சார்பில் வரவேற்கிறேன்...

மாணவன் சொன்னது…

வலையுலைகிற்கு இனிதே சிரம் தாழ்ந்த வணக்கங்களுடன் வாழ்த்துக்களைகூறி வரவேற்கிறோம்.. மான்கவி கவிஞர் அவர்களை...

மாணவன் சொன்னது…

அருமையான தொடக்கத்துடன் தாய்மையைபற்றிய கவிதையுடன் ஆரம்பித்தது அழகு...

மாணவன் சொன்னது…

//உறுப்பு தானங்களையே
உயர்வாகப் பேசும் உலகில்
இதோ!
உயிர்ப் பணயம் வைத்து
உயிர் தருகிறாள்
ஒரு தாய்!//

தாய்மைக்கான சிறப்பான வரிகள்...

தொடர்ந்து பல நல்ல படைப்புகளை வழங்க வேண்டும்